Monday 24 April 2017

GEOPOLYMER CONCRETE



GEOPOLYMER CONCRETE


General Introduction
Concrete usage around the world is second only to water. For the production of concrete Ordinary Portland Cement (OPC) is a major material for binding purpose. Some environmental issues are there during production of OPC. One ton of cement production approximately liberates 0.80 – 1 ton of carbon dioxide to the environment. In addition, more energy are required to produce the cement next to steel.
Portland cement manufacture can cause environmental impacts at all stages of the process. This includes emissions of air pollution in the form of dust, gases, noise and vibration when operating machinery and during blasting in quarries, consumption of large quantity of fossil fuel during manufacture and release of CO2 from the raw materials during manufacture.
The CO2 associated with Portland cement manufacture falls in to three categories:
Source 1: CO2 emission from decarbonation of lime stone.It is fairly constant, minimum around 0.47kg CO2 per kg of cement, maximum 0.54kg CO2 per kg of cement.
Source 2: CO2 from kiln fuel combustion, it varies with plant efficiency: efficient precalciner         plant 0.24kg CO2 per kg of cement, low efficiency wet process as high as 0.65kg CO2 per kg of cement, typical modern practices (e.g. UK)  averaging around 0.30kg CO2 per kg of cement.
Source 3: CO2 produced by vehicles in cement plants and distribution. It is almost insignificant at 0.002 – 0.005 CO2 per kg of cement.
Total CO2 emission around the world is 0.80kg CO2 per kg of cement. Electrical energy consumption is of the order of 90 – 150 kWh per ton of cement.
Emission of carbon di oxide causes greenhouse effect and it is consider to an increases of global temperature that may result in climate change. In an article scientist John Hooke, Queensland University, Australia. He told that every day there will be an increases of CO2 in our earth, this temperature was 4 times bigger than the temperature produced during bomb blast in Hiroshima and Nagasaki at Japan. 90% of global temperature goes to inside the sea.  The amount of greenhouse gas emission due to cement production is estimated to be about 1.35billion tons annually or 7% of total greenhouse gas emission to the environment.
On the other hand, abundant availability of fly ash worldwide creates opportunity to utilize this by product of burning coal, as a substitute for manufacturing of concrete. When used as a partial replacement of OPC, in the presence of water in ambient temperature, the fly ash reacts with calcium hydroxide during hydration process of OPC and form the calcium silicate gel (CSH).
Geo polymer
Geo polymer are material based on pure aluminosilicate materials such as fly ash, granulated blast furnace slag obtained from industrial waste or calcined clays like metakoline, activated with an alkali metal hydroxide and silicate solution. The term “Geo polymer” was proposed by Davidovits(1980)  due to their setting mechanism, a polycondensation process under alkaline conditions, similar to organic polymers.
Geo polymerization is a complex multiphase exothermic process, involving a series of dissolution – reorientation – solidification reaction analogous to those observed in zeolite synthesis. According to T.F.Yen(Year ) geo polymers can be classified in to two major groups: pure inorganic geo polymers and organic containing geo polymers.
Benefits of Geo polymer                                                                                               
The geo polymer does not create a greenhouse gas emission since there is no calcination step in the synthesis, thus avoiding the release of CO2 and because of this energy efficiency, inorganic polymer have become increasingly attractive. Additionally it is possible to produce these products using recycled materials. In addition these alumino silicate materials possess comparatively higher strength and are much more resistance to chemical attack, e.g. by acids.
                                     







Figure 1 Comparison of Conventional Cement and Geo polymer binder.                                                                                                                    
Fly ash based geo polymer concrete:
The geo polymer concrete can be formed by binding the fine and coarse aggregate with geo polymers (Fly ash and alkaline solution). It can be used in structures instead of OPC concrete. The manufacture of geo polymer concrete is carried out using usual concrete technology methods. 
As in case of OPC concrete, the aggregate occupy about 75 – 80% by mass in geo polymer concrete. The silicon and aluminium in the low calcium fly ash react with alkaline liquid that is combination of sodium or potassium hydroxide and sodium or potassium silicate to form the geo polymer that binds the fine, coarse aggregate and other unreacted materials.

Monday 4 August 2014

இன்றைய காலத்திற்கான வீடுகள்


கட்டுமானத் துறை அதிவேகமாக வளர்ந்துவருகிறது. கட்டுமானத்தை நம்பி வாழ்வை நகர்த்துபவர்களுக்கு இது ஆரோக்கியமான விஷயம். என்றாலும் கட்டுமானத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் சேதப்படுத்துகிறது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கூற்றைக் கட்டுமானத் துறையினரும், வீடு வாங்க நினைப்போரும் கவனத்தில் கொள்வது அவசியம்.
புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் காரணங்களில் ஒன்றாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. கட்டுமானங்களின்போது சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபடுகிறது. மேலும் கட்டிடங்களிலிருந்து வெளியேறும் பசுமை மாறா வாயுக்களும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக அமைகின்றன.
ஆகவே நமது வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யத் துடிக்கும் அதே வேளையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் நிறுத்துவது நல்லது. கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு சில தீர்வுகளைக் கண்டறிவது மிகவும் அவசியமானது.
இந்தக் கண்ணோட்டத்தாலேயே பசுமை வீடுகள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே வலுப்பெற்றது. வீடுகளைக் கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருள்களின் உபயோகம் அடுத்த தலைமுறையினரைப் பாதித்துவிடக் கூடாது. ரியல் எஸ்டேட் துறை நீண்ட காலம் ஆரோக்கியமாக நீடித்திருக்க கட்டுமானப் பொருள்களின் உபயோகத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
மேம்படும் வாழ்க்கைத் தரம்
சுற்றுசூழலுக்கு உகந்த வீடுகளை நாம் கட்டும்போது, அதிகப்படியான நீர் தேவைப் படாது, கட்டுமானப் பொருள்களும் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் கட்டிடப் பணிகள் இயற்கையைப் பாதிக்காது.
இந்த வீட்டில் குடியேறிய பின்னரும் இயற்கை ஆதாரங்களான வெளிச்சமும் நல்ல காற்றும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் வீட்டிற்குள் காணப்படும். அதிகமான வெப்பம் வீட்டிற்குள் உருவாவதைப் பசுமை வீடுகள் தவிர்த்துவிடும். இதனால் நாம் சுவாசிப்பதற்குத் தேவையான ஆரோக்கியமான காற்று வீட்டில் எப்போதும் கிடைக்கும்.
பசுமை வீடுகளால் நமது வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமல்ல வீடு கட்டும் செலவும் மிகக் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இந்தக் கட்டுமானங்கள் அதிக கட்டுமானப் பொருள்களை வேண்டுவதில்லை; நீரையும் ஆற்றலையும் அதிகமாக உட்கொள்வதில்லை.
உண்மையான பசுமை வீடுகள் எவை?
பசுமை வீடுகள் பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, அவற்றைச் சரியாக புரிந்துகொள்ளாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இத்தகைய வீடுகள் பெரிய அளவில் உருவாக்கப் படவில்லை. இந்த வீடுகளை உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் இதில் எள்ளளவும் உண்மை இல்லை.
அதேபோல் கட்டுமான நிறுவனங்களும் பசுமை வீடுகளை அமைக்க அதிக செலவாகும் என்னும் தவறான எண்ணத்தாலேயே அவற்றை அமைக்கத் தயக்கம் காட்டுகின்றன. மேலும் பசுமை வீடுகளுக்கான தொழில்நுட்பம், கட்டுமானப் பொருள்கள், கட்டிட நிபுணர்கள் போன்றவற்றைக் கண்டடையவும் கட்டுமான நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.
ஆனால் பசுமை வீடுகளுக்கான தேவை இந்தியாவில் உள்ளதையும் கட்டுமான நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. எனவே பசுமை வீடுகளுக்குரிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமலேயே பசுமை வீடுகள் என்னும் குடியிருப்புகளை விற்றுவருகின்றன.
கட்டுமானத்தில் கட்டிட வரைபடம் முதல் குடியேறுவது வரையிலான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றிய வீடே முழுமையான பசுமை வீடு.
இதற்கு மாறாக ஒருசில விதிமுறைகளை மட்டும் பின்பற்றி அதைப் பசுமை வீடு என்பது சரியான செயலல்ல. அப்படியானால் நிஜமான பசுமை வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் எனக் கேள்வி எழுகிறதா?
நிபுணர்கள் சில தகுதிகளைக் கூறுகிறார்கள், அவை:
குடியிருக்கத் தகுதியான பசுமை வீட்டுக்குச் சென்றுவர பொதுப் போக்குவரத்தே பயன்பட வேண்டும். வீட்டை ஒளியூட்டும் விளக்குகள் ஆற்றல்சேமிப்பு பெற்றவையாக இருக்க வேண்டும். கட்டுமானத்தின் நீர் தேவை குறைவாக இருக்க வேண்டும்.
சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்த வேண்டும்; மழைநீர் சேகரிப்பு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்; தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் அமைப்பு நிறுவப்பட்டிருக்க வேண்டும். குளிர்சாதன வசதி போன்ற செயற்கை வசதிகள் இன்றி இயற்கையான முறையில் வீட்டில் குளுமை நிலவ ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தேவையான அளவில் வீட்டில் திறந்தவெளியும் பசுமையான சூழலும் இருக்க வேண்டும். வீட்டில் உபயோகப்படுத்தப்படும் கழிவுநீரை முறையாகக் கையாளும் வசதி இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் பின்பற்றி கட்டப்பட்ட வீடே முறையான பசுமை வீடாக இருக்கும்.
பசுமை வீடுகள் என்று சொன்னாலும் சரி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் என்று சொன்னாலும் சரி இரண்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பை இயன்றவரை தவிர்த்த கட்டுமானத்தாலேயே சாத்தியப்படும். இந்தப் பசுமை வீடுகளால் மனிதர்களின் இயல்பான சுற்றுச்சூழல் அதிகமான அளவில் பாழாக்கப் படாததால் அவர்களின் நலமான வாழ்வு மேம்பட வழியேற்படும்.
நமது நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்த மரபான கட்டிடங்களில் நாம் வாழும்போது நமது வாழ்வின் தரம் மேம்படும். அதேவேளையில் அதிகப் படியான ஆற்றலையும் அந்தக் கட்டிடங்கள் உறிஞ்சாது. இயற்கைக்குச் சேதாரமற்ற ஆரோக்கிய சூழலையே நமது மரபான கட்டிடங்கள் வேண்டி நிற்கும்.

Thursday 31 July 2014

COMPACTING FACTOR TEST

COMPACTING FACTOR TEST






SLUMP TEST

  • Slump test is the most commonly used method of measuring workability of concrete.
  • it can be done either in laboratory or at site of work.
  • It is not suitable for suitable for very wet or very dry concrete.
  • It does not measure all factors  contributing to workability.
The apparatus for conducting the slump  test essentially consist of metallic mould in the form of frustum of a cone having the internal dimensions under,
Bottom Diameter = 20 cm
Top Diameter = 10 cm 
Height = 30 cm
The thickness of metallic sheet for the mould should not the thinner than 1.6mm. Sometime the mould is provided with suitable guides for lifting velocity up. For tamping the concrete, a steel tamping rod 16mm dia, 0.6 meter long with bullet end is used.

The mould is placed on a smooth, horizontal, rigid and non absorbant surface. The mould is then filled in four layers, each approximately 1/4 of height of the mould. Each layer tamped 25 times by the tamping rod taking care to distribute the strokes evenly over the cross section. After the top layer has been roded, the concrete is struck off level with trowel and tamping rod. The mould is removed from the concrete immediately by raising it slowly and carefully in a vertical direction. This allows the concrete to subside. The subsidence is referred as SLUMP of concrete. The difference in level between the height of the mould and that of highest point of the subsided concrete is measured. The difference in height in mm is taken as a slump of concrete.

ASTM measures the center of the slumped concrete as the difference in height. ASTM also specifies 3 layers.




Fresh Concrete Testing

Workability Test

It is discussed earlier that workability of concrete is a complex property. The following testes are prefer to find out the workability of concrete.
1. Slump Test
2. Compacting Factor Test
3. Flow Test
4. Kelly Ball Test
5. Vee Bee Consistometer Test.


Monday 14 July 2014

சுவரில் வேண்டாம் ஈரம்


நல்ல காற்றும் சூரிய ஒளியும் உட்புகும் வீட்டையே வசிக்கத் தகுந்ததாகப் பெரியோர்கள் சொன்னார்கள். வீட்டிற்குள் சூரிய ஒளி படரவில்லை எனில் வீடு பாதிப்புக்குள்ளாகும் என்பது இதன் உட்கருத்து. ஆனால் இன்று நாம் வீட்டை இடைவெளி இன்றி அடைத்துவிடுகிறோம்.
வெயில் காலத்தில்கூடப் பொருளாதார பாதுகாப்பு கருதி ஜன்னல்களைத் திறப்பதில்லை. குளிர்காலத்திலோ கேட்கவே வேண்டாம். சீல் வைத்து அடைத்துவிடுகிறோம். குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் வீட்டை அடைத்தே வைத்திருப்பதால் வீட்டின் உள்ளே சுழலும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. முறையான வென்டிலேஷன் இல்லை எனில் வீட்டின் ஈரம் உலரவே உலராது. இதனால் கட்டிடம் பாதிக்கப்படும்.
வீட்டின் கூரை மீதும் சுவர்கள் மீதும் நீர் புக அனுமதித்தால், நீர் கட்டிடத்திற்குள் ஊடுருவும், அங்கேயே தங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் கட்டிடத்தைப் பாதிக்கும். வீட்டின் கூரை மீது வீட்டுத் தேவைக்கான நீர்த் தொட்டியை அமைக்கிறோம். இதிலிருந்து நீர் கசிந்தால் அது கட்டிடத்தில்தானே ஊடுருவும்.
தண்ணீர் தொட்டியிலிருந்து வீட்டின் பல அறைகளுக்கும் புழக்கத்திற்காகத் தண்ணீர் குழாய்கள் வழியே செல்லும். இந்தக் குழாய்களில் நீர்க் கசிவு இருந்தால் அது கட்டிடத்தின் சுவர்களில் இறங்கும். சில சமயங்களில் நீர்க் கசிவு சுவரில் வெளிப்படும்; சில சமயங்களில் வெளியே நீர்பரவுவது தெரியாமலேயே சுவர்களின் உள்ளே நீர் தங்கும். இது சுவரை அரிக்கும்.
சமயங்களில் இந்த அரிமானம் சுவர் கீழே இடிந்துவிடுமளவுக்கு ஆபத்தானதாக மாறிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே கட்டிடச் சுவர் மீது படரும் ஈரத்தை எப்போதும் உலர்த்துவதில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.
சாதாரணமாக வீட்டில் புழங்கும் தண்ணீர் காரணமாகத் தினந்தோறும் 20 லிட்டர் நீர் வீட்டின் உள்ளே நிலவும் தட்பவெப்பத்தில் கலக்கிறது. இந்த நீரானது ஈரப்பதமாகக் காற்றில் கலந்திருக்கும். இதை முறையே வெளியேற்றாவிட்டால் அது ஆபத்தை விளைவிக்கும்.
குளியலறை, சமையலறை போன்றவற்றில் நாம் பயன்படுத்தும் தண்ணீர் ஒரு பகுதி இந்த அறைகளில் உள்ள காற்றில் கலந்துவிடும். எனவே குளியலறை, சமையலறை போன்ற இடங்களில் சரியான ஃபேன்களைப் பயன்படுத்தி இந்தக் காற்றை உலர்த்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும்.
வீட்டின் அஸ்திவாரத்திற்கும் தரைத் தளத்திற்கும் இடையே மண்ணை நிரப்பி வீட்டின் ஈரம் அடித்தளத்திற்குப் பரவாமல் பாதுகாக்க வேண்டும். அதாவது வீட்டின் அஸ்திவாரத்தின் மீது நேரடியாகத் தளத்தைப் பரப்பக்கூடாது. இரண்டிற்கும் இடையே ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருள்களை நிரப்ப வேண்டும். இதனால் அஸ்திவாரத்தை நேரிடையாக ஈரம் பாதிக்காது.
மழை பெய்யும்போது கட்டிடத்தின் மீது விழும் தண்ணீரை மிகக் கவனமாகக் கையாளவேண்டும். இந்தத் தண்ணீரை மழை நீர் சேகரிப்பு தொட்டிக்கு அனுப்பலாம். ஆனால் இந்த மழை நீர் நேரடியாக நிலத்திற்குள் புக அனுமதித்தல் கூடாது. அப்படி நேரடியாக நிலத்திற்குள் சென்றால் அது கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்குள் புகுந்து அரித்துவிடும். இது கட்டிடத்திற்கு ஆபத்தாக முடியும்.
ஈரமான இடங்களில் செய்தித்தாள்கள், துணிமணிகள் போன்றவற்றை வைக்கக் கூடாது. இவற்றில் ஈரம் தங்கிக் கட்டிடத்திற்குச் சேதாரத்தை ஏற்படுத்தும். வீட்டின் உள்ளே தண்ணீர்க் குழாய்கள் போன்றவை சேதமடைந்தால் அவற்றை உடனே பழுது பார்த்துவிட வேண்டும். நாளை நாளை எனத் தள்ளிப் போட்டால் அதனால் வீட்டிற்குத்தான் சேதம் என்பதைக் கவனத்தில் வைக்க வேண்டும்.
வீட்டிற்கென ஈரமானி ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது நலம். வீட்டிற்குள் நிலவும் ஈரப்பதை அறிந்துகொண்டு அதற்கேற்றாற்போல் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். வீட்டிற்குள் ஈரத்துணிகள் போன்றவற்றை உலர்த்துதலைக் கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
வீட்டிற்குள் மக்கிப்போன நாற்றமடித்தால் உடனே கவனிக்க வேண்டும். ஈரப்பதத்தால் ஆபத்து உள்ளது என்பதன் அறிகுறி அது.

Tuesday 24 June 2014

கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்

கம்பியிலும் வந்துவிட்டது ரெடிமேட்



பழைய கட்டிடங்களில் சிறப்பைப் பற்றி நாம் வியந்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தக் காலத்தில் ஒரு கட்டிடத்தைக் கட்டுவதற்குப் பல காலம் ஆகும். இப்போது அதே உறுதியுடன் குறைந்த கால அவகாசத்தில் கட்டிடங்களை மிக விரைவாகக் கட்டிவிட முடியும் அதுவும் முன்பைவிட குறைந்த விலையில். அவ்வளவு புதிய புதிய தொழில்நுட்பங்கள் கட்டுமானத் துறையில் அறிமுகமாகி வருகின்றன. இம்மாதிரியான ஒரு தொழில்நுட்பம்தான் ரெடிமேட் ஸ்டீல். இவ்வகை தொழில்நுட்பம் சமீபத்தில் வெற்றிகரமாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரெடிமேட் சிமெண்ட் கலவை குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். “Ready Mix Concrete Cement’ என்ற பெயரில் நகரத்தில் அடிக்கடி தென்படும் வாகனத்தையும் நாம் பார்த்திருப்போம். பழைய காலத்தைப் போல சிமெண்ட்டையும் மண்ணையும் சரியான விகிதத்தில் கலந்து, பின் அதைப் பில்லரில் ஊற்றிப் பூச வேண்டும். இது ஒன்றும் இத்தனை எளிய காரியம் அல்ல. அதற்கு முன்பு ஆற்று மணலைத் தெளிக்க வேண்டும். தெளித்த மணலை அள்ளி சிமெண்ட்டுடன் நீர் ஊற்றிக் குழைக்க வேண்டும். குழைத்ததை அள்ளி எடுத்துச் செல்ல ஒருவர் வேண்டும். இப்படி அதிக மனித உழைப்பையும், காலத்தையும் கோரும் வேலைகளுக்கு மாற்றாக ரெடி மிக்ஸ் சிமெண்ட் வந்தது. இது முக்கியமாகப் பெரிய கட்டிடங்களுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது.
இந்த மாதிரி தேவையில்லாத வேலையாட்களையும் காலத்தையும் குறைக்கும் பொருட்டு வந்துள்ள தொழில்நுட்பம்தான் ரெடிமேட் ஸ்டீல். பொதுவாக இன்றைக்குள்ள கட்டிடங்களுக்கு ஆதாரமாக இருப்பது கான்கிரீட்தான். இந்த கான்கிரீட்டின் ஆதாரத்திற்கு அடிப்படை கட்டுமானக் கம்பிகள்தாம். இந்தக் கம்பிகளைக் கட்டுவது அதிக உழைப்பையும் காலத்தையும் எடுக்கும் வேலை. முதலில் கட்டுமானத்திற்கான இரும்புக் கம்பிகளை வாங்கி வந்து கட்டிடத்திற்கு ஏற்றவாறு அதை வெட்டி, வளைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள இட நெருக்கடியில் இந்த மாதிரி வேலைகளுக்கு இடவசதி தேவைப்படும். இரண்டாவது கம்பிகளைக் கொண்டுவந்து சேர்க்க, அவற்றை வளைத்துக் கட்டவும் ஆட்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள். இந்த மாதிரியான சிக்கல்கள் ஏதும் இல்லாமல் மிக எளிதாகக் கம்பிகளைக் கட்ட இந்தப் புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது.
“கட்டுமானத்திற்குரிய விவரங்களை அதாவது Bar Bending Scheduleஐ எங்களுக்கு முன்பே கொடுத்துவிட்டால் அதற்குத் தகுந்தவாறு கம்பிகளை நாங்களே வளைத்து கட்டிடப் பணிகள் நடைபெறும் இடத்திற்கே அனுப்பிவிடும். அதை அப்படியே இறக்கி சிமெண்ட் கலவைகளை இட்டாலே போதுமானது” என்கிறார் ஜிகேஎஸ் ரெடிமேட் ஸ்டீல்ஸ் என்ற பெயரில் ரெடிமேட் ஸ்டீல்களை உருவாக்கிவரும் வாசுதேவன்.
இந்தத் தொழிலில் ஆறு ஆண்டு காலமாகச் செயல்பட்டுவரும் வாசுதேவன் இதற்காக மென்பொருட்களை உபயோகித்து கம்பிகளைத் தேவைக்கு ஏற்ப நுட்பமாகவும் கச்சிதமாகவும் உருவாக்கிவருவதாகச் சொல்கிறார். “இந்த முறையின் மூலம் கட்டிடச் செலவை ஓரளவு குறைக்க முடியும். பழைய முறைப்படி கட்டிடப் பணிகள் நடக்கும் சைட்டிலேயே கம்பிகளை வெட்டுவதால் நிறைய கம்பிகள் வீணாவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதாவது பழைய முறையில் 5 சதவீதம் வீணாகும் எனக் கொண்டால் இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் 1.5 சதவீதம்தான் வீணாகும்” என்கிறார் அவர்.
பழைய முறையில் ஒரு கட்டிடக் கட்டுமானத்திற்கான கம்பிகளை நம்மால் உத்தேசமாகத்தான் கணக்கிட முடியும். அதனால் கம்பிகள் கட்டுமானத்திற்குப் பிறகு மிஞ்சி வீணாகவும் வாய்ப்புண்டு. இந்தப் புதிய முறையில் ரெடிமேட் கம்பி கொடுக்கும் நிறுவனமே அதை உருவாக்கித் தருவதால் கம்பி வீணாவதும் தடுக்கப்படும்.
கட்டிடப் பணியிடத்திலேயே வேலையை மேற்கொண்டால் அது மற்ற வேலைகளுடன் ஒரு பகுதி வேலை என்பதால் அதற்குத் தனிக் கவனம் கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. இந்த வேலை அவர்களைப் பொறுத்தவரை தனியானது. அதனால் அதைச் சிறப்பாகவும் கவனமாகவும் செய்வார்கள். தேவைப்படும் நேரத்தில் உடனடியாகக் கம்பிகள் கிடைக்கும். ஒப்பீட்டளவில் பார்த்தால் விலையும் சிக்கனம்தான். கம்பிகளை வெட்ட, வளைக்க, கட்ட வேலையாட்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.